உன்னை  ஈன்றோரை
வினவியதுண்டா?
உண்டாயா என்று
உன்னவளை மட்டும்
வினவியது சரியா ?




தோழா,
என் தாய் மீது
அன்புகொண்ட என் தந்தையும்,
அவர் மீது அன்புகொண்ட
என் அன்னையும் இருக்கும்வரை.
அவ்வினாவை நான் உரைப்பது
அர்த்தம்மற்றது.

ஆனால்,
என்னவளிடம் அவ்வினாவை
வினவ என்னை விட்டால்
ஓருயிர் இல்லை . 

இக்கணம் சொல்
அவ்வினாவை என்னவளிடம் மட்டும்
நான் வினவியது 
சரியா? தவறா ?
என்று.!!!


Comments

Popular posts from this blog