Posts

Showing posts from January, 2019
நானும் அவளும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளில்லை என்றாலும், நானும் அவளும் அண்ணன் தங்கை தான். வார்த்தை தவறாமல் அண்ணா அண்ணா என்றவள், இப்போது உரிமையில் வாடா போடா என்று அன்பாய்  சண்டை போடுகிறாள்.. உரிமையாய் கோவப்படுகிறள், அதடுகிறாள், மொத்தத்தில் என் கண்ணை, சந்தோசத்தில் கலங்க வைக்கிறாள். அன்பானவர்களை விட்டு விலக நினைக்கும்  மனம் தான், இவளை பேச சொல்லி ரசிக்கிறது. அவள் தோள்களில் சாய்ந்து தூங்கையில், அவள் கீழே சாயும் முன், என் கை என்னை அறியாமல் விரைகிறது, அவளை தாங்கி கொள்ள.. மொத்தத்தில் இனம் புரியாத ஒர் உணர்வு என்னுள்.. இவ்வுணர்வை நீ புரிந்து கொள்ள நீயும் அண்ணனாக வேண்டும்.
மகளே, நான் எங்கே இருந்தாலும், என்னுயிர் உன்னோடுதான். என் தாயாக அரவணைக்க உன் அம்மா வந்தாள், உன் அன்னையை போல அன்பு காட்ட நீ வந்தாய்.. உருவம் மாறினாலும் உங்களின் அன்பு மட்டும் மாரவில்லையடி. கண்ணுக்குள் நீ இருப்பதால், கண்ணீரும் தயங்குதடி. காத்திருந்தது போதும்மடி, அன்பாய் ஒரு முத்தம் கொடுப்பாயா..! நான் விரும்பும் ஒரு வரி கவிதையை நீ "அப்பா" என்று சொல்லிவிட ஆசையாய் காத்திருக்கிறேன்.
நீ யார் மீது அன்பு கொண்டாயோ.. அவர்களை விலக நினைக்காதே. விலக நினைக்கும் ஒவ்வொரு முறையும், நீ மரணித்து விடுவாய்.
உன்மீது உண்மையான அன்பு கொண்டவர்களால் மட்டுமே, உன்னிடம் பொய்யாக நடிக்க முடியும், தன் காயத்தின் வலியை, உன் மனம் தாங்காது என்றறிந்ததால்
மண்ணில் விழும் கண்ணீரின் வலியை விட, மனதிற்குள் அழும் கண்ணிரின் வலி அதிகம். மண்ணில் விலுந்தவை மறுநொடி கரைத்து விடும். ஆனால் மனதிற்குள் விலுந்தவை மறைக்கப்படும்.