எதற்கு பிரிந்தோம்மென்று காரணம் அறியவில்லை,. ஆண்டுகள் பல கடந்தபின்னும், உன் நினைவுகள் மட்டும் இன்றும் மறக்கவில்லை. என்றோ நாம் பயணித்த பேருந்தை கண்டதும், ஒரு நொடி பொழுது கண்ணெதிரில் தோன்றினாய். அக்கணத்தை என்னவென்று உரைப்பதடி... என்றோ உன்னக்காக மறந்த என் புன்னகையும், மகிழ்ச்சியையும், மீண்டும் என்னுள் ஊனர்த்தேன்னடி.. உன் நினைவுகளுடன் அப்பேருந்து சுமந்து சென்ற ஒவ்வொரு தொலைவும், உன் நினைவின் ஆழத்தை, என் விழிகளில் கசிந்த கண்ணீரும் சொல்லும்மடி.. தெரிந்தவர்கள் பார்த்து விடுவார்களோ... என்ற பயதினில் பயணித்தது, யாரும் அறியாமல் என் கையைப்பற்றி கொண்டு பயணித்தது இன்றும் மறக்கவில்லையடி. கடந்தது சிறு தொலைவுதான், ஆனால் பல காலங்கள் தொடர்கின்றது உந்தன் நினைவுகளாக... இந்தனை இன்பங்களில் ஒன்றாய் பயணித்த நாம், இறப்பில் மட்டும் தனியாய் சென்றது சரியா... உன்னோடு இறப்பதும் சுகம்தான் என்பதை ஏன்னடி நீ மறந்தாய்..