Posts

Showing posts from October, 2018
Image
எங்குதான் சென்றாயோ..! எதற்காக புதைந்தாயோ ..! என் இதயத்தில்-இடம் பத்தவில்லையென்று இம்மண்ணில் புதைந்தாயோ ..? என்முகத்தைப் பார்க்க பிடிக்கவில்லை என்பதால், மண்ணால் உன்முகத்தை மூடிக்கொண்டாயோ..? மரணிக்கும் தருவாயில்கூட இந்த மதிகெட்டவனின் நினைப்பு உனக்கு வரவில்லையா..? போகும்முன் ஒரு பார்வை பார்த்திருந்தால், உனக்கு துணையாய், உன்னுடன் வந்துதிருப்பேன், என்பதை மறந்து சென்றாயோ ? எவ்வழி சென்றாயோ, வழியறியாமல் தவிக்குறேன். வழிகாட்ட நீ வருவாயா..? உன்விரல் பற்றிக்கொண்டு நானும் வருகிறேன் மகிழ்ச்சியாய். தனிமையில் தவிக்குறேன். தெரியவில்லையா உனக்கு, விரைந்து வா.. சேர்ந்தே போகலாம்..
Image
நம்மீது அன்பு கொண்ட சில உள்ளங்களுக்காக-தினமும் நடிக்க வேண்டியிருக்கிறது, மகிழ்ச்சியாய் இருப்பதுபோல்
Image
என்னவளே..! இன்று என்- நாள் என்று நீ அறிவாயா..? பத்து மாதமாய் பத்திரமாய் உன்னைப் பேணி, உன் தாய் உன்னை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்த நாளடி இன்று. உன்னால், ஓயாத வலியை உன்தாய் அடைந்தாலும். நீ "அம்மா" என்று கூப்பிட தேவதையாய் பிறந்த நாளடி இன்று. உன் தந்தையை, என் கணவன் என்று அறிமுகம் செய்தவள் - உன்தகப்பணை பாரென்று அறிமுகம் செய்த நாள் இன்று. நீ துங்கும் அழகைக்கான உன் ஊரே திரண்டு வந்த நாளடி இன்று.  உன் தாயிடம் ஒருபோதும் உன்னை பிறியமட்டேன் என்ற உன் தந்தையின் சத்தியத்தை, இருவரின் இடையில் நீ உறங்கி, அதைப் பொய்யக்கிய நாள் இன்று. உன் பாட்டியும், உன் அப்பனை போல கண்ணு, உன் அன்னையை போல சிரிப்பும் என்று உன் காதில் கூறிய நாளடி இன்று. நீ இந்நாளில் பிறந்ததே, இந்நாளின் சிறப்புதானடி வேறன்ன வேண்டும்மடி 
Image
உன் பிரிவின் நினைவுகள், என் உடம்பை தீயாக எரித்தலும், என் இதயம் மட்டும் குளிராக இருக்குதடி. காரணம் இன்றும் நீ அதில் இருப்பதினால்.
Image
முதல் காதல் தந்த வலியால், மீண்டும் மனதில் அது வருவதில்லை. அதையும் தாண்டி தோன்றும் காதல் மிகவும் அழகானது, ஆழமானது-அதிலும் ஓர் பிரிவைக் கொடுக்காதே என்னுயிரே. மீண்டும் ஒரு பிரிவை  தாங்காதடி என் இதயம்.
Image
கனவிலும் கூட என்னவளை பிரியாமல், ஆனந்தமாய்  நான் துயில, சின்னதொரு ஜன்னலில் செல்லமாய் கதிரவனும் எட்டிப் பார்க்க, விடிந்ததென்று தெரியாமல் உந்தன் கனவும் நீளுதடி. என் கனாவை கலைக்க வந்த அந்த கதிரவனை வசைப்பாடி- இமை திறக்க மனமில்லாமல் கோபத்துடன் நானிருக்க, கனவினில் கண்டவள் கண்ணெதிரில் தூங்குகிறாள் இமைகளை திறவென்று - அந்த ஆதவனும்  அதட்டுகின்றான் . என்னவளை கண்ட கனாவினை, கலைக்க மனமில்லாமல், மெல்லமாய் என் விழி திறக்க, சிறு சிரிப்புடன் தேவதை அவளோ, தூங்குகிறாள். இச்சிரிப்பினில் காரணமாயிரம் புதைந்திருக்க அதில் எதுவென்று நான் அறிவேனடி! தேவதை உன்னை ரசித்தப்படி, உன் அருகில் நான் படுத்திருக்க, என்னை அதட்டிய  அந்த ஆதவன், உன்னை மட்டும் விட்டு விடுவானா என்ன! அரையடி இடைவெளியில் அழகாய் நீ துயிலுறங்க - அதை கலைக்க மனமும் தயங்குதடி. உந்தன் தலைமுடி மோதலும் உன்கனவை  கலைக்குமென, என் விரலால் அதை வருடி உன் காதோரத்தில் ஒதுக்கிவிட, எந்தன் விரல் மோதலில் அந்த அரையடி இடைவெளியும் தொலைத்துவிட்டு- என்னை இறுக்கி அணைத்து கொள்வாயடி. "என் செல்...
Image
பல நேரங்களில் என் நிழல் கூட என்னுடன் இருப்பதில்லை. இதில் நீயும் என்னுடன் இருப்பாய் என்று நான் நினைப்பதும் என் தவறுதான்.