நீ இல்லா தருணத்தில், நொடிபொழுதும் நரகமாய் உணருகிறேன்னடி. இதுவரை 24 மணிநேரமும் உன்னுடன் கழித்துவிட்டேன்- ஆனால் இப்போது எப்படி கழிப்பதென்று தெரியலடி. தினமும் காலையில் உந்தன் பதிவுகளை கண்ட என் விழிகள் - இன்றும் என்னை அறியாமல் என்கைகளும் கைபேசியை தேடுதடி. உன்னால் இடைவிடாமல் சினுங்கிய என் செல்போனும் கேக்குதடி, நீ எங்கே என்று. எப்படி சொல்வேன்னடி உனக்கு தொல்லை தர அவள் இன்று இல்லையென்று. உன்னக்காக நான் எழுதிய சிறுகிறுக்கல்களும் தெரியாதடி, இனி அதை படிக்க இங்கே நீ இல்லையென்பது. உனக்காக நான் தேடி தேடி வைத்த காதல் பதிவுகளும், என்னை கைகொட்டி சிரிக்குதடி - நீ பார்க்கவில்லையா என்று. உன்னை மறந்துவிடு வேலையை பாரென்று சொல்லும் என் நண்பர்களுக்கு எப்படி நீ சொல்லுவேன், பார்க்கும் இடமெல்லாம் உந்தன் நினைவுகளென்று. நீ இல்லை என்றறிந்த என் மனம்கூட நம்ப மாறுகின்றன. இன்றும் எங்கு செல்போன் சினுங்கினாலும் நீதானோ என்று நினைக்குதடி. தினமும் உன்முகம் பார்த்தே பழகிவிட்டேன். இன்று உன்முகம் எங்கு சென்று பார்ப்பேனடி நீ அழைக்க மாட்டாய் என்றறிந்தும்...