மகளே,
நான் எங்கே
இருந்தாலும்,
என்னுயிர் உன்னோடுதான்.

என் தாயாக
அரவணைக்க
உன் அம்மா வந்தாள்,
உன் அன்னையை போல அன்பு காட்ட நீ
வந்தாய்..

உருவம் மாறினாலும்
உங்களின்
அன்பு மட்டும்
மாரவில்லையடி.

கண்ணுக்குள் நீ
இருப்பதால்,
கண்ணீரும்
தயங்குதடி.

காத்திருந்தது
போதும்மடி,
அன்பாய் ஒரு முத்தம்
கொடுப்பாயா..!

நான் விரும்பும்
ஒரு வரி கவிதையை
நீ "அப்பா"
என்று
சொல்லிவிட
ஆசையாய்
காத்திருக்கிறேன்.

Comments

Popular posts from this blog