உயிரே..
உன் கண்களில் வழியும்
கண்ணீரை துடைக்கும்
விரல்களாக
நான் இருப்பதைவிட,
அதில் கண்ணீர் வராமல்
பார்த்து கொள்ளும்
இதயமாவே இருக்க
ஆவல் கொள்கிறது.

உன் கண்ணீரை துடைக்க
ஆயிரம் கைகள் ஓடிவந்தாலும்,
அதில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள
நான் மட்டும்தான் இருக்கிறேன்
என்பதை மறவாதே
என் உயிரே...

உன் கண்களில்
கண்ணீர் வந்தபின்
துடைப்பதில் இல்லையடி
உன்மீது நான் கொண்ட பாசம்.
அதில்,
கண்ணீரே வராமல்
பார்த்து கொள்வதில் உள்ளதடி..   

Comments

Popular posts from this blog